எங்கள் இயக்குநர்கள் குழுவின் கூட்டு நிபுணத்துவமும் தொலைநோக்கு பார்வையும், அவர்களின் குறிக்கோள்களை அடைய மக்களை மேம்படுத்துவதன் மூலம், மக்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்கிறது.
இயக்குநர்கள் குழுவானது எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளின் பொது மேற்பார்வை, இயக்கம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்கு பொறப்பேற்றுள்ள ஒன்பது குறிப்பிடத்தக்க இயக்குநர்களைக் கொண்டுள்ளது. இயக்குநர்கள் குழுவின் முதன்மையான பொறுப்புகள் பின்வருமாறு:
கார்ப்பரேட் நிர்வாகத்தின் உயர் தரங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் பல்வேறு சட்டங்களுடன் இணங்குதல்
எங்கள் நிதி நிர்வாகத்தை மேற்பார்வை செய்தல் மற்றும் பல்வேறு வணிகங்களை அங்கீகரித்தல்
எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைத்தல்
எங்கள் செயல்திறனைக் கண்காணித்தல் மற்றும் வளர்ச்சிக்கான உத்தியை உருவாக்குதல்
எதிர்த்தரப்பு மற்றும் பிற விவேகமான இடர் மேலாண்மை வரம்புகளை அமைத்தல்
டாக்டர் அனிஷ் ஷா மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் 2014-இல் மஹிந்திரா குழுமத்தின் குழுத் தலைவர் (ஸ்ட்ராட்டஜி) ஆக சேர்ந்தார். முக்கிய ஸ்ட்ராட்டஜி முன்முயற்சிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரவு அறிவியல் போன்ற திறன்களைக் கட்டமைத்தல் மற்றும் குழு நிறுவனங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புகள் ஆகியவற்றில் அனைத்து வணிகங்களுடனும் நெருக்கமாக பணியாற்றினார். 2019-இல் அவர் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் குழு சி.எஃப்.ஓ-ஆக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அவரது பொறுப்புகளானவை குழு நிர்வாக அலுவலகத்தின் முழு பொறுப்பு மற்றும் வாகன உற்பத்தித் துறையில் ஆட்டோ மற்றும் ஃபார்ம் பிரிவுகள் தவிர்த்து பிற அனைத்து வணிகங்களின் பொறுப்புமாகும்.
அனீஷ் 2009 முதல் 2014 வரை ஜி.இ. கேபிடல் இந்தியாவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார், அங்கு அவர் எஸ்பிஐ கார்டு கூட்டு முயற்சி உட்பட வணிகத்தின் மாற்றத்திற்கு வழி வகுத்தார். ஜி.இ-இல் அவரது பணி 14 ஆண்டுகள் நீடித்தது, இந்த காலகட்டத்தில் அவர் ஜி.இ கேப்பிடல் US மற்றும் உலகளாவிய பிரிவுகளில் பல தலைமைப் பதவிகளை வகித்தார். குளோபல் மார்ட்கேஜ் இயக்குநராக, 33 நாடுகளில் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இடரை நிர்வகிப்பதற்கும் பணியாற்றினார். ஜி.இ. மார்ட்கேஜ் இன்சூரன்ஸின் மூத்த துணைத் தலைவராக (சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு மேம்பாடு), அவர் பல்வேறு வளர்ச்சி முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் ஜி.இ- இலிருந்து ஒரு உப நிறுவனம் உருவாக, ஒரு ஐ.பி.ஓ-இற்கு வணிகத்தைத் ஆயத்தம்செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார். ஜி.இ- இல் அவர் பணியாற்றத் தொடங்கிய போது, அனீஷ் ஸ்ட்ராடெஜி, இணையவழி மற்றும் சேல்ஸ் ஃபோர்ஸ் செயல்திறனை வழிநடத்தினார், மேலும் ஜி.இ-க்குள் டாட்-காம் வணிகத்தை நடத்துவதில் தனித்துவமான அனுபவத்தைப் பெற்றார். "டிஜிட்டல் காக்பிட்" ஐ உருவாக்குவதில் சிக்ஸ் சிக்மாவை சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக அனிஷ் ஜி.இ- இன் மதிப்புமிக்க லூயிஸ் லாடிமர் விருதையும் பெற்றார்.
ஜி.இ- க்கு அப்பால் உலகளாவிய வணிகங்களுடன் அவருக்கு மாறுபட்ட அனுபவமும் உள்ளது. அவர் பாங்க் ஆப் அமெரிக்காவின் யு.எஸ். டெபிட் புராடக்ட்ஸ் வணிகத்தை வழிநடத்தினார், அங்கு அவர் ஒரு புதுமையான வெகுமதி திட்டத்தை தொடங்கினார், கட்டணத் தொழில்நுட்பத்தில் பல முயற்சிகளை வழிநடத்தினார் மற்றும் வாடிக்கையாளருக்கான மதிப்பை அதிகரிக்க வங்கி முழுவதும் பல்வேறு குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றினார்.
பாஸ்டனில் உள்ள பெயின் & கம்பெனியில் ஒரு ஸ்ட்ராடெஜி ஆலோசகராக, வங்கி, ஆயில் ரிக்ஸ், பேப்பர், பெயிண்ட், ஸ்டீம் பாய்லர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட பல தொழில்துறைகளில் பணியாற்றினார். அவரது முதல் பணிப்பங்கு மும்பையில் உள்ள சிட்டி வங்கியில் தொடங்கியது, அங்கு அவர் வர்த்தக சேவைகளின் உதவி மேலாளராக வங்கி உத்தரவாதங்கள் மற்றும் கிரெடிட் கடிதங்களை அவர் வழங்கினார்.
அனீஷ் கார்னகி மெல்லனின் டெப்பர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பி.எச்.டி பட்டம் பெற்றார், அங்கு கார்ப்பரேட் நிர்வாகத் துறையில் அவர் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தார். கார்னகி மெல்லனில் முதுகலைப் பட்டமும் பெற்றார், அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்-இல் நிறுவன மேலாண்மையில் முதுகலை டிப்ளோமா பெற்றார். வில்லியம் லாடிமர் மெல்லன் உதவித்தொகை, ஐ.ஐ.எம்.ஏ.யில் தொழில் கல்வி உதவித்தொகை, நேஷனல் டேல்ன்ட் சர்ச் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார்.
திரு. ரமேஷ் ஐயர் அவர்கள், ஏப்ரல் 30, 2001 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார், ஆரம்பத்தில் இருந்தே எங்களுடன் பணியாற்றி வருகிறார். அவர், வணிக மேம்பாடு, ஃபைனான்ஸ் மற்றும் மார்கெட்டிங் சமபந்தமான விஷயங்களில் மிக்க அனுபவம் வாய்ந்தவர். திரு. ஐயர் எம் & எம், ஹோல்டிங் நிறுவனத்தின் குழு நிர்வாக வாரியத்திலும், பல்வேறு மஹிந்திரா குழும நிறுவனங்களின் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். வணிகத்தில் இளங்கலை பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
திரு. ஐயர் அவர்கள் பம்பாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் வங்கி மற்றும் நிதிக் குழுவின் உறுப்பினர், ஃபைனான்ஸ் கைத்தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் (எஃப்.ஐ.டி.சி) கோர் கமிட்டி மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் என்.பி.எஃப்.சிகளின் பணிக்குழு (FICCI) விலும் இடம்பெற்றுள்ளார். சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (சியாம்) அமைத்த பொருளாதார விவகாரங்கள் கவுன்சிலின் ஃபைனான்ஸ் மற்றும் லீசிங் மற்றும் காப்பீடு தொடர்பான குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளார்.
திரு. ஐயர் அவர்கள் ஏராளமான விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்று சிறந்து விளங்குகிறார். அவருக்கு கார்ப்பரேட் தலைமைத்துவத்திற்கான இந்திய சாதனையாளர் விருதை இந்திய சாதனையாளர் மன்றம் வழங்கியுள்ளது. புதுடெல்லியின் பொருளாதார ஆய்வுகள் நிறுவனத்தால் வணிக தலைமைத்துவ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. சி.எம்.ஓ ஆசியாவின் எம்ப்ளாயர் பிராண்டிங் இன்ஸ்டிடியூட் வழங்கிய ‘சி.இ.ஓ வித் எச்.ஆர் ஓரியண்டேஷன்’ விருது அவரின் தலைமைதுவத்துக்கு கிடைத்த பாராட்டு. அதோடு அல்லாமல், புது தில்லியின் பொருளாதார ஆய்வுகள் நிறுவனத்தால் உத்யோக் ரத்தன் விருதையும் பெற்றுள்ளார்; புனேவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் ராஷ்டிரிய உத்யோக் பிரதிபா விருது; மற்றும் மும்பையின் தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பின் பாரதிய உத்யோக் ரத்னா விருது. அதோடு முடியவில்லை.
திரு. ரமேஷ் ஐயர் அவர்கள் இந்தியாவின் மிகவும் 'மதிப்புமிக்க' தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பற்றிய பிசினஸ் வேர்ல்டு சிறப்பு அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளார். நடுத்தர நிறுவனங்களின் பட்டியலில் 65 இல் 5 வது (வருவாய்: ரூ. 1,000 - 3,000 கோடி) பிரிவில் மற்றும் அதே பிரிவில் 65 இல் 6 வது, இது அதன் ஒரு வருட செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது. அவர், நிறுவனத்தின் ஐந்தாண்டு செயல்திறன் அடிப்படையில் 100 இல் 20 வது மற்றும், நிதித்துறையில் தரவரிசைகளின் அடிப்படையில் 12 இல் 3 வது தரத்தை பெற்றுள்ளார்.
திரு. தனஞ்சய் முங்காலே அவர்கள் இந்திய சார்டட் அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளார் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் வணிக மற்றும் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். அவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியா மற்றும் ஐரோப்பாவில் கார்ப்பரேட் மற்றும் முதலீட்டு வங்கியில் செலவிட்டார். அவர் துணைத் தலைவராக இருந்தார் - தனியார் வங்கி, பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் உறுப்பினர் - நிர்வாகக் குழு, டிஎஸ்பி மெரில் லிஞ்ச் லிமிடெட். தற்போது, அவர் இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். பல்வேறு பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் வாரியங்களில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினராக உள்ளார் - ஆக்ஸ்போர்டு இந்து ஆய்வுகளுக்கான மையம், ஆக்ஸ்போர்டு, யு.கே மற்றும் மஹிந்திரா யுனைடெட் வேர்ல்ட் கல்லூரியின் தேசிய குழுவின் உறுப்பினராக உள்ளார்.
திரு. சந்திரசேகர் பாவே அவர்கள் 1975 ஆம் ஆண்டில் இந்திய நிர்வாக சேவையில் (ஐ.ஏ.எஸ்) மின்சார பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மத்திய மற்றும் மாநில அரசின் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றினார், மேலும் குடும்ப நலன் மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக மகாராஷ்டிரா அரசிடமிருந்து விருதுகளையும் வென்றார். பின்னர் அவர் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) 1992-1996 வரை மூத்த நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார், இந்திய மூலதனச் சந்தைகளுக்கான ஒழுங்குமுறை உள்கட்டமைப்பை உருவாக்க உதவினார்.
திரு. பாவே அவர்கள் பின்னர் 1996 ஆம் ஆண்டில் தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) அமைக்க ஐ.ஏ.எஸ்ஸிலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்றார் மற்றும் 1996 முதல் 2008 வரை அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியக் குழுவின் தலைவராகவும், சர்வதேச பத்திரங்கள் ஆணையங்களின் (ஐயோஸ்கோ) தொழில்நுட்ப மற்றும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
திரு. பாவேவுக்கு பல தொழில்முறை இணைப்புகள் உள்ளன:
பொது நலன் மேற்பார்வை வாரியத்தின் (PIOB), மாட்ரிட்டின் உறுப்பினர், இது சர்வதேச கணக்காளர் கூட்டமைப்பின் தர நிர்ணய அமைப்புகளின் பணிகளை பொது நலனின் கண்ணோட்டத்தில் மேற்பார்வை செய்கிறது. இந்தியாவின் லண்டன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர். சர்வதேச கணக்கியல் தர நிர்ணய வாரியத்தை மேற்பார்வையிடும் லண்டனின் ஐ.எஃப்.ஆர்.எஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்.
திரு. பாவே அவர்கள் இந்திய மனித குடியேற்றங்களுக்கான (IIHS) இலாப-நோக்கற்ற அமைப்பின் தலைவராக உள்ளார், நகர்ப்புறங்களின் சூழலில் மனித குடியேற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கி அதை பரப்புவதற்கான நோக்கத்திற்காக நிறுவப்பட்டது.
திருமதி ரமா பிஜாபுர்கர் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார் (ஹான்ஸ்.) மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸிலிருந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் மேலாண்மை முதுகலை டிப்ளோமாவைப் பெற்றார், அங்கு அவர் இப்போது ஆளுநர் குழுவின் செயலில் உறுப்பினராகவும் விசிடிங் ஆசிரியராகவும் உள்ளார். அவர் ஒரு சுயாதீன சந்தை மூலோபாய ஆலோசகர் மற்றும் விளம்பரம், மார்கெட்டிங் மற்றும் ஆலோசனை போன்றவற்றில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அவர் முன்பு மெக்கின்சி & கம்பெனி, ஏ.சி. நீல்சன் இந்தியாவுடன் இணைந்திருந்தார் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் முழுநேர ஆலோசகராக பணியாற்றியுள்ளார். வளர்ந்து வரும் சந்தை மற்றும் நுகர்வோர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார் மற்றும் ‘இந்திய சந்தையில் வெற்றி - நுகர்வோர் இந்தியாவின் மாற்றத்தைப் புரிந்துகொள்வது’ என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார்.
தற்போது, திருமதி பிஜாபுர்கர் அவர்கள் பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களின் வாரியங்களில் ஒரு சுயாதீன இயக்குநராக உள்ளார்.
திரு. மிலிந்த் சர்வதே ஒரு பட்டயக் கணக்காளர், செலவுக் கணக்காளர், நிறுவனச் செயலாளர், வணிகவியல் பட்டதாரி மற்றும் சிஐஐ-ஃபுல்பிரைட் ஃபெலோ (கார்னகி மெல்லன் பல்கலைக்கழகம், பிட்ஸ்பர்க், அமெரிக்கா) ஆவார். மரிகோ மற்றும் கோத்ரேஜ் போன்ற குழுக்களில் நிதி, மனிதவளம், ஸ்ட்ராடெஜி மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் ஆகியவற்றில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.
திரு. மிலிந்த் சர்வதே இன்கிரியேட் வேல்யூ அட்வைசர்ஸ் எல்.எல்.பி.-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வணிக மற்றும் சமூக மதிப்பை உருவாக்குவதற்கு வழிவகுப்பதே அவரது நோக்கம். ஆலோசகர், குழு உறுப்பினர் மற்றும் முதலீட்டாளர் போன்ற பல்வேறு பணிப்பொறுப்புகளை ஏற்றக்கொள்வதின் மூலம் அவர் தனது இலக்கினை நோக்கிப் பயணிக்கிறார்.
அவரது ஆலோசனைப் பணிகள் நுகர்வோர் துறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு துறையை உள்ளடக்கியது.
அவர் க்ளென்மார்க், மைண்ட்ட்ரீ, மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர், மேட்ரிமோனி.காம் மற்றும் ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே ஆகிய நிறுவனங்களுக்கு அவர் இயக்குநராக உள்ளார்.
அவரது முதலீட்டு குவியப் புள்ளிகளில் நுகர்வோர் துறை மற்றும் நிதி மற்றும் மனித வளங்களின் நிபுணத்துவத்தைச் சார்ந்து கட்டமைக்கப்பட்ட நிதிகள் / நிறுவனங்கள் அடங்கும்.
திரு. மிலிந்த் சர்வதே 2011-இல் ஐ.சி.ஏ.ஐ விருது-சி.எஃப்.ஓ-எஃப்.எம்.சி.ஜி மற்றும் 2012-இல் சி.என்.பி.சி டிவி -18 சி.எஃப்.ஓ விருது-எஃப்.எம்.சி.ஜி & ரீடெயில் ஆகிய விருதுகளைப் பெற்றார். அவர் 2013-இல் சி.எஃப்.ஓ இந்தியாவின் ஹால் ஆஃப் ஃபேம் குழுவில் இடம்பிடித்தார்.
திரு. அமித் ராஜே தற்போது தாய் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் கூட்டாளர் மற்றும் கூட்டணிகளின் நிர்வாகத் துணைத் தலைவராக உள்ளார், மேலும் மஹிந்திரா குழுமத்தில் முன்னணி M&A மற்றும் முதலீட்டாளர் உறவுகளின் பொறுப்பாளராக உள்ளார்.
மஹிந்திரா குழுமத்தில் சேருவதற்கு முன்னர், திரு அமித் ராஜே கோல்ட்மேன் சாச்ஸின் முதன்மை முதலீட்டுப் பிரிவில் நிர்வாக இயக்குநராக இருந்தார். நாவல்டெக் ஃபீட்ஸ் பிரைவேட் லிமிடெட், குட் ஹோஸ்ட் ஸ்பேசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் குளோபல் கன்ஸூமர் பிராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாகக் குழுக்களில் கோல்ட்மேன் சாச்ஸின் நியமன இயக்குநராக இருந்தார்.
शதிரு. அமித் ராஜே கார்ப்பரேட் ஃபைனான்ஸ், மெர்ஜர்ஸ் & அக்விசிஷன்ஸ் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த அனுபவம் பெற்றவர். கோல்ட்மேன் சாச்ஸுக்கு முன்பு, திரு. ராஜே கோடக் மஹிந்திரா வங்கியின் மாற்று சொத்து பிரிவான கோடக் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் மற்றும் டெலாய்ட் & கோ நிறுவனத்தில் பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளில் பணியாற்றினார்.
திரு. அமித் ராஜே மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் ஃபைனான்ஸ் & பிரைவேட் ஈக்விட்டியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர் ஆவார்.
டாக்டர் ரெபேக்கா நியூஜென்ட் ஸ்டீபன் இ. மற்றும் ஜாய்ஸ் ஃபியன்பெர்க் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு அறிவியல் பேராசிரியர், கார்னகி மெலன் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு அறிவியல் துறையின் தலைவர் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சமூகத்திற்கான தொகுதி மையத்திற்கான இணை ஆசிரிய உறுப்பினரும் ஆவார். புள்ளியியல் மற்றும் தரவு அறிவியல் ஆலோசனை, ஆராய்ச்சி, பயன்பாடுகள், கல்வி மற்றும் நிர்வாகத்தில் பல்கலைக்கழக அளவிலான கல்வியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். தரவுப் பயன்பாட்டில், பாதுகாப்புத்துறை கையகப்படுத்தல் தொழிலாளர் திறனை மேம்படுத்துவது தொடர்பாக தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ ஆய்வு அக்கடமியின் இணைத் தலைவராக டாக்டர் நியூஜென்ட் உள்ளார். சமீபத்தில் தரவு அறிவியல் பிரிவு : தி அண்டர்கிராஜூவேட் பெர்ஸ்பெக்டிவ் முன்னோடி NASEM ஆய்வில் பணிபுரிந்தார்.
அவர் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் & டேட்டா சயின்ஸ் கார்ப்பரேட் கேப்ஸ்டோன் திட்டத்தின் ஸ்தாபக இயக்குநராக உள்ளார், இது ஒரு அனுபவரீதியான கற்றல் முன்முயற்சி ஆகும், இது தற்போதைய வணிகச் சவால்களுக்கு தரவு அறிவியல் தீர்வுகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் தொழில் மற்றும் அரசு நிறுவனங்களுடன் கூட்டமைக்கும் ஒரு திட்டமாகும். மேலும் நிதி, மார்க்கெட்டிங், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகளாவிய நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யும் திட்டமாகும். டாக்டர் நியூஜென்ட் உயர் பரிமாண, பெரிய தரவு கொண்ட சிக்கல்கள் மற்றும் ரெக்கார்ட் லிங்கேஜ் பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கிளஸ்டரிங் மற்றும் வகைப்பாடு முறைகளில் பணியாற்றியுள்ளார். இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் கிளாசிஃபிகேஷன் சொசைட்டியின் தலைமைப்பதவி (2022-க்கு திட்டமிடப்பட்டுள்ளது) உள்ளிட்ட தொடர்புடைய தலைமைப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். தரவு-தகவலறிந்த முடிவெடுப்பதை ஊக்குவிக்கும் மற்றும் அடாப்டிவ் இன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் தரவு விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானமாக ஆய்வு செய்ய அனுமதிக்கும் இண்டராக்டிவ் தரவு பகுப்பாய்வுத் தளங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் அவரது தற்போதைய ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.
அவர் அமெரிக்கன் ஸ்டாட்டிஸ்டிகல் அசோசியேஷன் வாலர் அவார்ட் ஃபார் இன்னொவேஷன் உள்ளிட்ட பல தேசிய மற்றும் பல்கலைகழக அளவிலான கற்பித்தல் விருதுகளை வென்றுள்ளார். மேலும் அவர் புள்ளியியல் துறையின் ஸ்பிரிங்கர் டெக்ஸ்ட்ஸ்–இல் ஓர் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
அவர் வாஷிங்டன் பல்கலைக்கழத்தில் புள்ளியியலில் பி.எச்டி பட்டம் பெற்றவர். மேலும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக்கத்தில் புள்ளியியலில் எம்.எஸ் பட்டமும் ரைஸ் பல்கலைகழகத்தில் கணிதம், புள்ளியியல் மற்றும் ஸ்பானிஷில் பி.ஏ பட்டங்களையும் பெற்றவர்.
அவர் குழு நிறுவன அலுவலக தலைமைக் குழவிலும் ஈடுபட்டுள்ளார்.எம்&எம்-இல் சேரும் முன், திரு அமித் சின்ஹா பெயின் & கம்பெனியில் மூத்த பார்ட்னர் மற்றும் இயக்குனராகப் பணியாற்றினார். பெயினில் 18 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் பெரிய-அளவிலான, பல நாட்டு உத்தி, அமைப்பு, டிஜிட்டல் மற்றும் செயற்திறன் மேம்பாட்டு செயற்திட்டங்களை நிர்வகித்தார். அவர் அமெரிக்கா மற்றும் இந்தியா முழுவதிலும் முதன்மை தனியார் ஈக்விட்டி நிதிகளுக்கு வணிக ரீதியான தொடக்க முயற்சி மற்றும் முழுத் திறன்கொண்ட போர்ட்ஃபோலியோ ஸ்ட்ராட்டஜி திட்டங்களுக்குத் (வாங்குதலுக்குப் பிறகு) தலைமை வகித்தார். திரு அமித் சின்ஹா தனது பணி வாழ்க்கையை டாட்டா மோட்டார்ஸில் தொடங்கினார். பின்னர் ஐகேட் பட்னி (இப்போது கேப்ஜெமினி) -இல் இந்தியா சிங்கபூர் மற்றும் அமெரிக்காவில் தலைமைத்துவப் பதவிகளை வகித்தார்.
ஃபைனான்ஸ் மற்றும் ஸ்ட்ராட்டஜியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். அங்கு அவர் பால்மர் ஸ்காலராக இருந்து சிபெல் ஸ்காலர்ஷிப் பெற்றவர் ஆவார். அவர் ராஞ்சி பிர்லா இன்ஸ்டிட்யூட்டில் பொறியியல் இளங்கலை (மின்னியல் மற்றும் மின்னணுவியல்) பட்டம் பெற்றவர். திரு அமித் சின்ஹா ஆனந்தா ஆஸ்பெனின் இந்திய தலைமைத்துவ ஃபெல்லோஷிப் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனந்தா ஆஸ்பென் ஃபெல்லோ ஆவார்.
திரு. ரமேஷ் ஐயர் அவர்கள், ஏப்ரல் 30, 2001 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார், ஆரம்பத்தில் இருந்தே எங்களுடன் பணியாற்றி வருகிறார். அவர், வணிக மேம்பாடு, ஃபைனான்ஸ் மற்றும் மார்கெட்டிங் சமபந்தமான விஷயங்களில் மிக்க அனுபவம் வாய்ந்தவர். திரு. ஐயர் எம் & எம், ஹோல்டிங் நிறுவனத்தின் குழு நிர்வாக வாரியத்திலும், பல்வேறு மஹிந்திரா குழும நிறுவனங்களின் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். வணிகத்தில் இளங்கலை பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
திரு. ஐயர் அவர்கள் பம்பாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் வங்கி மற்றும் நிதிக் குழுவின் உறுப்பினர், ஃபைனான்ஸ் கைத்தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் (எஃப்.ஐ.டி.சி) கோர் கமிட்டி மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் என்.பி.எஃப்.சிகளின் பணிக்குழு (FICCI) விலும் இடம்பெற்றுள்ளார். சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (சியாம்) அமைத்த பொருளாதார விவகாரங்கள் கவுன்சிலின் ஃபைனான்ஸ் மற்றும் லீசிங் மற்றும் காப்பீடு தொடர்பான குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளார்.
திரு. ஐயர் அவர்கள் ஏராளமான விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்று சிறந்து விளங்குகிறார். அவருக்கு கார்ப்பரேட் தலைமைத்துவத்திற்கான இந்திய சாதனையாளர் விருதை இந்திய சாதனையாளர் மன்றம் வழங்கியுள்ளது. புதுடெல்லியின் பொருளாதார ஆய்வுகள் நிறுவனத்தால் வணிக தலைமைத்துவ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. சி.எம்.ஓ ஆசியாவின் எம்ப்ளாயர் பிராண்டிங் இன்ஸ்டிடியூட் வழங்கிய ‘சி.இ.ஓ வித் எச்.ஆர் ஓரியண்டேஷன்’ விருது அவரின் தலைமைதுவத்துக்கு கிடைத்த பாராட்டு. அதோடு அல்லாமல், புது தில்லியின் பொருளாதார ஆய்வுகள் நிறுவனத்தால் உத்யோக் ரத்தன் விருதையும் பெற்றுள்ளார்; புனேவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் ராஷ்டிரிய உத்யோக் பிரதிபா விருது; மற்றும் மும்பையின் தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பின் பாரதிய உத்யோக் ரத்னா விருது. அதோடு முடியவில்லை.
திரு. ரமேஷ் ஐயர் அவர்கள் இந்தியாவின் மிகவும் 'மதிப்புமிக்க' தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பற்றிய பிசினஸ் வேர்ல்டு சிறப்பு அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளார். நடுத்தர நிறுவனங்களின் பட்டியலில் 65 இல் 5 வது (வருவாய்: ரூ. 1,000 - 3,000 கோடி) பிரிவில் மற்றும் அதே பிரிவில் 65 இல் 6 வது, இது அதன் ஒரு வருட செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது. அவர், நிறுவனத்தின் ஐந்தாண்டு செயல்திறன் அடிப்படையில் 100 இல் 20 வது மற்றும், நிதித்துறையில் தரவரிசைகளின் அடிப்படையில் 12 இல் 3 வது தரத்தை பெற்றுள்ளார்.
திரு. அமித் ராஜே தற்போது தாய் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் கூட்டாளர் மற்றும் கூட்டணிகளின் நிர்வாகத் துணைத் தலைவராக உள்ளார், மேலும் மஹிந்திரா குழுமத்தில் முன்னணி M&A மற்றும் முதலீட்டாளர் உறவுகளின் பொறுப்பாளராக உள்ளார்.
மஹிந்திரா குழுமத்தில் சேருவதற்கு முன்னர், திரு அமித் ராஜே கோல்ட்மேன் சாச்ஸின் முதன்மை முதலீட்டுப் பிரிவில் நிர்வாக இயக்குநராக இருந்தார். நாவல்டெக் ஃபீட்ஸ் பிரைவேட் லிமிடெட், குட் ஹோஸ்ட் ஸ்பேசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் குளோபல் கன்ஸூமர் பிராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாகக் குழுக்களில் கோல்ட்மேன் சாச்ஸின் நியமன இயக்குநராக இருந்தார்.
शதிரு. அமித் ராஜே கார்ப்பரேட் ஃபைனான்ஸ், மெர்ஜர்ஸ் & அக்விசிஷன்ஸ் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த அனுபவம் பெற்றவர். கோல்ட்மேன் சாச்ஸுக்கு முன்பு, திரு. ராஜே கோடக் மஹிந்திரா வங்கியின் மாற்று சொத்து பிரிவான கோடக் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் மற்றும் டெலாய்ட் & கோ நிறுவனத்தில் பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளில் பணியாற்றினார்.
திரு. அமித் ராஜே மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் ஃபைனான்ஸ் & பிரைவேட் ஈக்விட்டியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர் ஆவார்.
விவேக் ஒரு பட்டயக் கணக்காளர் (1994), நிதியியல் செலவுக் கணக்காளர் (1993) மற்றும் பம்பாய் பல்கலைக்கழகத்தில் (1991) பி.காம் பட்டம் பெற்றவர். பி & ஜி, சீமென்ஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் ஐசிஐசிஐ ஆகியவற்றில் அவர் பணியாற்றிய காலத்தில் நுகர்வோர் பொருட்கள், ஐடி ஆலோசனை மற்றும் திட்ட நிதியியல் போன்ற பல்வேறு துறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி செறிந்த பணி அனுபவம் பெற்றவர்.
மஹிந்திரா ஃபைனான்ஸில் சேருவதற்கு முன்பு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, அவர் பட்டியலிடப்பட்ட எஃப்எம்சிஜி நிறுவனமான மரிகோ லிமிட்டட் நிறுவனத்தில் பணி புரிந்தார். மரிகோவின் குழு சி.எஃப்.ஓவாக தனது கடைசி பதவியில், வணிக நிதி & வணிகச் செயல்பாடுகள், டிரஷரி மற்றும் காப்பீடு, இன்வெஸ்டர் ரிலேஷன்ஸ், அகத் தணிக்கை மற்றும் நிர்வாகம், ரிஸ்க் & காம்ப்ளையன்ஸ் (ஜி.ஆர்.சி), அக்கவுண்டிங் & பேரோல், டாக்சேஷன் அண்ட் எம் & ஏ போன்ற பல்வேறு செயல்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
விவேக் FICCI-இன் கார்ப்பரேட் நிதிக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அவர் தற்போது FICCI-இன் CFO கான்க்ளேவில் உறுப்பினராக உள்ளார்.
திரு. அனுஜ் மெஹ்ரா அவர்கள் வீட்டு நிதி கடன்களின் வணிகத்தில் உள்ள மஹிந்திரா ரூரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெடில் (எம்.ஆர்.எச்.எஃப்.எல்) நிர்வாக இயக்குநராக உள்ளார். செயல்பாட்டுப் பகுதிகள் மற்றும் நிதிச் சேவைத் துறையில் 16 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். திரு. மெஹ்ரா அவர்கள் தனது பயணத்தை மஹிந்திரா ரூரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தலைமை நிர்வாக அதிகாரியாக 2007 இல் தொடங்கினார்.
பி.ஏ. ஹானர்ஸ். (பொருளாதாரம்) டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற திரு. மெஹ்ரா அவர்கள் 1982 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் முதுகலை பட்டதையும் பெற்றார். லக்மே லிமிடெட் நிறுவனத்தின் மருந்துப் பிரிவின் அகில இந்திய விற்பனை மேலாளராக சிறிது காலம் பொறுப்பேற்பதற்கு முன்பு சுமார் 7 ஆண்டுகள் லக்மே லிமிடெட் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில்) தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். ஐ.டி.சி கிளாசிக் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்தபோது அவர் நிதிச் சேவைத் துறையில் நுழைந்தார், அங்கு அவர் நிறுவனத்தில் இருந்த காலத்தில் பிராந்திய மேலாளர், பொது மேலாளர் (மேற்கு) மற்றும் உதவி துணைத் தலைவராக பணியாற்றினார். அவர் 20 ஆம் நூற்றாண்டு நிதிக் கூட்டுத்தாபனத்தில் துணைத் தலைவராகவும், செஞ்சுரியன் வங்கி லிமிடெட் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார், அங்கு பல்வேறு சவாலான பொறுப்புகளை வெற்றிகரமாக கையாண்டார். பின்னர் அவர் மஹிந்திரா கெஸ்கோ டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்தார், அங்கு அவர் அவர்களின் மார்கெட்டிங் துறையை கையாண்டார்.
திரு. அசுதோஷ் பிஷ்னோய் இந்தியாவில் நுகர்வோர் சந்தைப்படுத்தல் மற்றும் நிதிச் சேவை வணிகங்களில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். பரஸ்பர நிதி வணிகத்தில் அவர் வகித்த பதவிகளில் டி.எஸ்.பி மெரில் லின்ச் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, ஜே.எம் மியூச்சுவல் ஃபண்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் எல்&டி மியூச்சுவல் ஃபண்டின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியவை அடங்கும். ஜே. வால்டர் தாம்சன் இந்தியாவில் பிராண்ட் திட்டமிடல் இயக்குநராகவும், வணிக மேம்பாட்டுத் தலைவராகவும், ரீடர்ஸ் டைஜஸ்ட் மேகசைன்ஸ் அண்ட் புக்ஸ் வெளியீட்டாளராகவும், நுகர்வோர் சந்தைப்படுத்தல் குறித்த அவரது பணிகளில் குறிப்பிடத்தக்கவை.
திரு. அசுதோஷ் பிஷ்னோய் NiSM கமிட்டி ஃபார் எம்பேனல்மென்ட் ஆப் ரிசோர்ஸ் பெர்சன்ஸ் மற்றும் NISM கமிட்டி ஃபார் கன்டினியூயிங் எஜுகேஷனிலும் உறுப்பினராக உள்ளார் புனேவின் சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மஹிந்திரா யுனிவர்ஸ் திட்டத்திற்காக படித்தார். திரு பிஷ்னோய் முன்னாள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் கேப்பிடல் மார்கெட்ஸில் விசிடிங் ஃபேகல்டியாக இருந்தார், மேலும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் செக்யூரிடீஸ் மார்கெட் அமைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ் (AMFI) வாரியம் மற்றும் அதன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக்கான குழுவில் உறுப்பினராக உள்ளார்.
திரு. ராஜ்னிஷ் அகர்வால் லக்னோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரி மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை ஆய்வில் முதுகலை பட்டம் பெற்றவர். ஸ்டீயரிங் கமிட்டியின் உறுப்பினராகவும், மஹிந்திரா பிசினஸ் & கன்சல்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநராகவும் உள்ளார்.
அவர் சில்லறை கடன், வாகன கடன்கள், சொத்து இடர் மேலாண்மை, கிராமப்புற மேலாண்மை, வணிக மற்றும் தயாரிப்பு மேம்பாடு, சேனல் மற்றும் உறவு மேலாண்மை மற்றும் மக்கள் நிர்வாகங்களில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.
பெங்களூரு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மற்றும் கல்கத்தா இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து பொது மேலாண்மை மற்றும் வணிக தலைமைத்துவத்தில் குறுகிய கால படிப்பை முடித்தார்.
திரு. பாலாஜி அவர்கள் ஒரு மேலாண்மை நிபுணர், ஸ்ராடிஜி, மார்கெடிங் மற்றும் சேல்சில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். திரு. பாலாஜி அவர்கள் 2008 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்துடன் இணைந்துள்ளார் மற்றும் பல்வேறு சவாலான திட்டங்களுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.
மெட்ராஸின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்) பட்டம் பெற்றவர். திரு. பாலாஜி அவர்கள் கல்கத்தாவின் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார், மார்கெடிங் மற்றும் ஃபைனான்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.
இதற்கு முன்பு, திரு. பாலாஜி அவர்கள் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் - கார்ப்பரேட் ஸ்ட்ராடிஜியாக இருந்தார். அவர் நெஸ்லேவுடன் பிராண்ட் உரிமையாளர் மேலாளராகவும், அக்ரோ டெக் ஃபுட்ஸ் மூத்த பிராண்ட் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
குழு வணிகங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான குழுவின் லட்சிய தொழில்நுட்ப மாற்ற நிகழ்ச்சி நிரலை இயக்குவதற்கும், புதிய வணிக மாதிரிகளை உருவாக்குவதற்கும், பல்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளர் அனுபவங்களை மாற்றுவதற்கும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம் மோஹித் பொறுப்பு.
மோஹித் 2020 அக்டோபரில் டி.பி.எஸ் வங்கியில் இருந்து மஹிந்திரா குழுமத்தில் இணைந்தார். டிஏபி.எஸ் வங்கியில் அவர் டெக்னாலஜி ஆப்டிமைசேஷன் தலைவராகவும், சிங்கப்பூருக்கு வெளியே ஹைதராபாத்தில் அமைந்துள்ள வங்கியின் முதல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமான ஆசிய மையத்தின் தலைவராகவும் இருந்தார். பொறியியல் மற்றும் புதுமைத் தொழில்நுட்பத் துறைகளான மொபைல், டேட்டா, ஏஐ மற்றும் கிளவுட் போன்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் பேங்கிங் திறன்களின் மேம்பாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார்.
பேங்கிங் மற்றும் நிதியியல் சேவைத் துறையில் கடந்த 17 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் அவர் தொழில்நுட்பம் & செயல்பாட்டுத் துறையில் 30 வருட அனுபவம் பெற்றுள்ளார்.
டி.பி.எஸ்-இல் சேருவதற்கு முன்பு, அவர் பாங்க் ஆஃப் அமெரிக்காவின் உலகெங்கிலும் உள்ள உலகளாவிய வணிகச் சேவை மையங்களுக்கான தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார், அதற்கு முன்னர் எம்ஃப்பசிஸ்-இல் சி.ஐ.ஓ-ஆக பணிபுரிந்தார்.
மொஹித் மின்னணுப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் கார்நெல் மற்றும் ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகங்களிலிருந்து அட்வான்ஸ்ட் மேலாண்மை மற்றும் தொழில்துறைசார் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
திரு வேதநாராயணன் சேஷாத்ரி மஹிந்திரா ஃபைனான்சின் இன்சூரன்ஸ் புரோக்கிங் துணை நிறுவனமான மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை அலுவலர் ஆவார். பிப்ரவரி ’21 இல் மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட்டில் சேரும் முன்னர் திரு வேதநாராயணன் சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பனி லிமிடெட்டின் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ -ஆகப் பதவி வகித்தார்.
வேதா ஒரு மேலாண்மை நிபுணர் ஆவார். அவரது ஒட்டுமொத்த 28 வருட அனுபவத்தில் 18 வருடங்கள் பி.எப்.எஸ்.ஐ பிரிவில் ரீடெய்ல் பேங்கிங், ஆயுள் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத பல்வேறு பணிகளைக் கையாண்டுள்ளார்.
ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட்டில், வாகன விற்பனையில் தனது தொழில்பணியைத் தொடங்கிய அவர், 2003-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ பேங்கில் சேரும் முன்னர் பிஐஎல்டி (பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) -இல் வணிக வளர்ச்சி மற்றும் உள்ளக ஆலோசனை துறைகளில் பதவி வகித்தார். ரீடெய்ல் வங்கியில், ரீடெய்ல் கடன்கள் மற்றும் சொத்துக்கள் ஆகிய இரண்டிலும் அவர் பணியாற்றினார் மற்றும் அடமான வணிகத்திற்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் கிராஸ் செல்லிங்கிற்கு தலைமை தாங்கினார்.
2007-ஆம் ஆண்டில், அவர் டாடா ஏஐஏ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து மூலோபாய திட்டமிடல், கூட்டாண்மை கையகப்படுத்தல் மற்றும் டாடா ஏஐஏ லைஃபின் கிழக்கு மண்டலத்தின் தலைவராக பல மூத்த தலைமைப் பதவிகளை வகித்தார். 2012-ஆம் ஆண்டில், வேதா முருகப்பா குழுமத்தின் ஆயுள் காப்பீடு அல்லாத நிறுவனமான, சோழா எம்.எஸ். ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் தலைமை மார்கெட்டிங் அதிகாரியாகச் சேர்ந்தார். மேலும் 2020-இல் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ ஆகப் பதவியேற்கும் முன்னர் சோழா எம்.எஸ் உடனான தனது 8 ஆண்டு பதவிக்காலத்தில், அவர் ஒரு வலுவான ரீடெய்ல் பிரான்ச்சைஸை உருவாக்கினார் மற்றும் சுகாதாரக் காப்பீடு எஸ்.பி.யு- ஐ உருவாக்குவது உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.
தொழில்ரீதியாக ஒரு பொறியியலாளரான வேதா எம்.டி.ஐ குர்கானில் பிஜிடிஎம்(PGDM) மற்றும் INSEAD பிரான்சிலிருந்து அட்வான்ஸ்ட் மேனேஜ்மெண்ட் புரோகிராமும் (AMP) படித்து முடித்துள்ளார்.
அதுல் அடிப்படையில் ஒரு பொறியாளர், பின்னர் மனிதவளத் துறை நிபுணரானவர். அவர் 28 ஆண்டுகள் வணிகம் மற்றும் மனித வளத்துறையில் அனுபவம் பெற்ற ஒரு தலைவர் ஆவார். இந்த பரந்த அனுபவம், உத்திமிக்க யோசனை மற்றும் சிறப்பாகச் செயல்படுவதன் மூலம் தேவையான விளைவுகளை வழங்குதல், ஆகிய இரண்டு அம்சங்களின் சிறந்த கலவையாகும்.
மனிதவளத்தில் கடந்த 19 வருடங்களில் அவர் மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்)-இல் பலவித வணிகங்களில் ஹெச்.ஆர் செயல்பாடுகளை வழிநடத்தியுள்ளார். அவற்றுள் ஆட்டோமொபைல், டிரக் மற்றும் பஸ், டிராக்டர், டிஜி செட், கட்டமைப்பு உப்கரணம் மற்றும் வேளாண்தொழில் ஆகியவை உள்ளடங்கும். இந்த நிர்வாகவியல் பயணத்தின்போது ஸ்ட்ராடெஜிக் மற்றும் டிரான்ஸ்ஃபர்மேஷனல் மனிதவள மேலாண்மை, அமைப்பு வடிவமைப்பு, மாற்ற மேலாண்மை, திறமை மேலாண்மை, ஓ.டி, திறன் கட்டமைப்பு, பணியாளர் ஈடுபாடு, மனிதவளத்தைப் பகிர்தல் சேவைகள் மற்றும் பி.எம்.எஸ் ஆகியவற்றை கையாண்டுள்ளார். .
தற்போது அவர் மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிட்டெட்டின் மனிதவளம் மற்றும் நிர்வாகப் பிரிவின் துணைத்தலைவராக உள்ளார்.
அவர் மஹிந்திரா குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவின் வழிகாட்டுக் குழுவின் உறுப்பினராவார்.
அவர் சர்வதேச பயிற்சியாளர் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் (பி.சி.சி) ஆவார் மேலும் எம்.பி.டி.ஐ சான்றிதழையும் பெற்றுள்ளார்.
பிறருக்குப் பயிற்சியளித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது அவருக்குப் பிடித்தமான ஒன்று.
Ruzbeh is the President – Group Human Resources & Communications since April 2020. He is also responsible for Corporate Social Responsibility and Corporate Services. He is a member of Mahindra’s Group Executive Board.
Ruzbeh joined the Mahindra Group in 2007, as Executive Vice President – Corporate Strategy, heading the Group's Strategy function. He became the Chief Brand Officer of the Group. During that time he spearheaded Mahindra's entry into racing and led the development of the Group's brand position and core purpose, 'Rise'. He then moved to head International Operations for the Automotive and Farm Equipment Sectors of M&M. Subsequentially he led Group Corporate Brand, PR and Communications, Ethics as well as Mahindra’s Racing team.
Ruzbeh joined the Mahindra Group in 2007, as Executive Vice President – Corporate Strategy, heading the Group's Strategy function. He became the Chief Brand Officer of the Group. During that time he spearheaded Mahindra's entry into racing and led the development of the Group's brand position and core purpose, 'Rise'. He then moved to head International Operations for the Automotive and Farm Equipment Sectors of M&M. Subsequentially he led Group Corporate Brand, PR and Communications, Ethics as well as Mahindra’s Racing team.
Post his Master's degree, Ruzbeh worked with Hindustan Lever and Unilever for close to 22 years, across geographies, in marketing, customer management and general management. This included stints as Marketing Manager – Home and Personal Care (with Unilever Central Asia), Regional Manager – Western India (with Hindustan Lever), Vice President – Customer Development (with Unilever’s Africa Regional Group), and Customer Development Director on the Board of Unilever Maghreb.
Email: [email protected]
Toll free number: 1800 233 1234 (திங்கள்-சனி, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை)
(Except National Holidays)
WhatsApp number: 7066331234
இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ் உங்களைச் சுற்றி கிளை
© உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ்
வடிவமைத்து உருவாக்கியது EvolutionCo
For illustration purpose only
Total Amount Payable
50000
This document has been prepared on the basis of publicly available information, internally developed data and other sources believed to be reliable. Mahindra & Mahindra Financial Services Ltd, ('MMFSL') does not warrant its completeness and accuracy. Whilst we are not soliciting any action based upon this information, all care has been taken to ensure that the facts are accurate and opinions given are fair and reasonable. This information is not intended as an offer or solicitation for the purchase or sale of any financial instrument receipt of this information should rely on their own investigations and take their own professional advice. Neither MMFSL nor any of its employees shall be liable for any direct, indirect, special, incidental, consequential, punitive or exemplary damages, including lost profits arising in any way from the information contained in this material.
MMFSL and its affiliates, officers, directors, and employees, including people involved in the preparation or issuance of this material, may vary from time to time, have long or short positions in, and buy or sell the securities thereof, of the company mentioned herein. MMFSL may at any time solicit or provide, credit, advisory or other services to the issuer of any security referred to herein. Accordingly, information may be available to MMFSL, which is not reflected in this material, and MMFSL may have acted upon or used the information prim to, or immediately following its publication.
Your form has been submitted successfully.
Our representative will get in touch with you shortly.